search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனைமலை வாலிபர் கொலை"

    ஆனைமலை குடிபோதையில் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலை தாத்தூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது26). போட்டோ கிராபர். தாத்தூர் மேற்கு வீதியை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ஹரிகிருஷ்ணன் (23) கட்டிட தொழிலாளி. இருவரும் நீண்டகால நண்பர்கள். நேற்று இரவு ஆனைமலை அடுத்த எல்.ஆர்.டி. பஸ் நிலையம் அருகே இருவரும் மது அருந்தினர்.

    விக்னேஷ்குமார் மதுபோதையில், ஹரிகிருஷ்ணனை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் அருகில் இருந்த ஹாலோபிளாக் கல்லை எடுத்து விக்னேஷ்குமாரை முகத்தில் பலமுறை தாக்கினார்.

    இதில் படுகாயமடைந் விக்னேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹரிகிருஷ்ணன் ஆனை மலை போலீஸ் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×